இளஞ்செழியனின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் கைது!

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் கைது!

யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் ஒரு­வரின் உயிரைப் பறித்து மற்­றொ­ரு­வ­ருக்கு காயத்தை ஏற்­ப­டுத்­திய துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பில் 8 வரு­டங்­க­ளாக இணைந்து செயற்­பட்டு ஆயுத பயிற்சி பெற்­றவர் என்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் பொலி­ஸாரால் தற்­போது தேடப்­பட்டு வரும் பிர­தான சந்­தேக நபர் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு கோப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற படு கொலை ஒன்றின் சந்­தேக நபர் எனவும், அது தொடர்பில் அவர் பிணையில் இருந்து வரு­வதும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் சிறப்புக் குழு­வொன்றின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
இந்த நிலையில் சந்­தேக நபரை கைது செய்­வ­தற்கு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன.
இந் நிலையில் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் தொடர்பில் இந்த மூன்று பொலிஸ் குழுக்­களும் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் நிலையில், சந்­தேக நபர் தொடர்பில் பல தக­வல்கள் பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.
குறித்த சந்­தேக நபர் 1996 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்­ளதுடன் அங்கு ஆயுதப் பயிற்­சியைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வரை அந்த இயக்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டுள்ளார். பின்னர் அந்த இய­கத்தில் இருந்து வில­கி­யுள்ள அவர் திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நப­ருக்கு 6 பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. முதல் மனைவி மூலா­மாக நான்கு பிள்­ளை­களும் இரண்டாம் மனைவி ஊடாக இரு பிள்­ளை­களும் சந்­தேக நப­ருக்கு உள்­ள­தா­கவும் சந்­தேக நபர் தொழில் ரீதியில் பஸ் சார­தி­யாக செயற்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளன.
இந் நிலையில் தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபரின் சகோ­தரர், உற­வுக்­கா­ரர்­க­ளான 42 வய­தான பால­சிங்கம் மகேந்­திர ராசா, 49 வய­து­டைய செல்­வ­ராசா மகேந்­திரன் ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் ஏனைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய மேற்­படி தக­வல்­களை சேக­ரித்­துள்­ளனர்.
48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்ப்ட்ட விசா­ர­ணை­களில் சம்­பவம் தொடர்பில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இந் நிலை­யி­லேயே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­னாண்டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.