நாளை பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு

மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லைக் கண்­டித்தும் உண்­மை­யான தாக்­கு­த­லா­ளிக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யும் நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணி­கள் சேவைப் புறக்­க­ணிப்­பில் ஈடு­ப­டு­வர் என்று அறி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­ப­தியை இலக்கு வைத்த தாக்­கு­தல் நீதித்­துறை மீதான அச்­சு­றுத்­தா­கும். அத­னைத் திட்­ட­மிட்­டுச் செய்­தோரை நீதிக்­கும் முன் நிறுத்­தும் பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உண்டு. எனவே உண்­மை­யான தாக்­கு­த­லா­ளி­யைக் கைது செய்து நீதி­யின் முன் நிறுத்­தப் பொலி­ஸார் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அதனை வலி­யு­றுத்தி நாளை திங்­கள்­கி­ழமை வடக்கு மாகா­ணச் சட்­டத்­த­ர­ணி­கள் நீதி­மன்ற வழக்­கு­க­ளில் முன்­னி­லை­யா­க­மாட்­டார்­கள் என்று யாழ்ப்­பா­ணம், வவு­னியா மாவட்ட சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் நேற்­றி­ரவு அறி­வித்­தது.

இதேவேளை நாளைய தினம் வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினாலும் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம் என வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச தனியார் நிறுவனங்களும் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.