மாகாணசபை தேர்தல் விவகாரம் நாளை அமைச்சரவையில்

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகா­ண­ச­பை­களின் ஆயுட்­கா­லத்­தினை நீடித்து அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தெ­னவும் அதற்­காக தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் 20ஆவது திருத்­த­மொன்­றினை முன்­வைப்­ப­தெ­னவும் தீர்­மா­னித்­துள்­ளது.

எனினும் சப்­ர­க­முவ, கிழக்கு, வட­மத்­திய மாகா­ண­ச­பை­களின் ஆயுட்­­காலம் நிறை­வுக்கு வரு­கின்ற நிலையில் அவற்­றுக்­கான தேர்­தலை பிற்­போ­டாது உட­ன­டி­யாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தோடு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தீர்­மா­னத்­தினை ஆத­ரிக்­கப்­போ­வ­தில்லை எனவும் தெரி­வித்­துள்­ளது.
இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தீர்­மா­னத்­தினை வர­வேற்­றுள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி உள்­ளூராட்சி தேர்­தலை அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாட்­டினை எட்­டி­யுள்ள கலப்பு முறையில் நடத்தி அதில் காணப்­படும் நிறை­கு­றை­களை ஆராய்ந்த பின்­னரே மாகாண சபைத் தேர்­தலை நடத்த முடியும்.
அதற்கு முன்­ன­தாக இம்­மூன்று மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பை திருத்­தாது தற்­போது நடை­மு­றையில் உள்ள விகி­தா­சார முறை­மை­யி­லேயே தேர்­தலை நடத்த வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
இவ்­வா­றான நிலையில் சிறு­பான்மை தேசிய இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் இத்­த­கைய நிலைப்­பாட்­டி­னையே வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரும் நிலையில் நாளைய தினம் அமைச்­ச­ர­வையில் இவ்­வி­டயம் குறித்து அதி­க­ளவில் அவ­தானம் செலுத்­தப்­படும் என தெரி­ய­வ­ரு­கின்­றது.
தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையில் இந்த விட­யத்தில் மாறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­வதன் கார­ண­மாக நாளை­ய­தினம் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தொ­டரில் கார­சா­ர­மான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெ­றலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.