வெளிநாட்டு ஊழியர்கள் கட்டார் முற்றுகையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய கட்டார் முற்றுகையினால் சில கட்டார் நிறுவனங்களுக்கான வியாபாரங்கள் வெகுவாக குறைத்துவிட்டது, 

அதனால் அந் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களிடம் தங்களது சொந்த நாடுகளுக்கு சம்பளம் இல்லாத கட்டாய விடுமுறைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறது,
குறிப்பாக விருந்தோம்பல், கட்டுமான மற்றும் கப்பல் துறை ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் கட்டார் நாட்டுக்கான சர்ச்சை தற்போது மூன்றாவது மாதத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாட்டில் உணவு மற்றும் மருந்தைப் பெறுவதற்கான பிற வழிகளில் (அதிக செலவு அதிகம்) இருந்தாலும், இச் சர்ச்சையானது இன்னும் பல வழிகளில் செலவுகளை கட்டார் நாட்டுக்கு ஏற்படுத்துகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.