வரலாற்று சிறப்பு மிக்க பொன்னாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஐப்பெருமாள் தேர் உற்சவம் - 12.09.2017

வரலாற்று சிறப்பு மிக்க பொன்னாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஐப்பெருமாள் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று மிகவிமர்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டவத்தில் பொன்னாலை ஸ்ரீ வெங்கடேஷ் வர வரதராஐப்பெருமாள்,ஸ்ரீ தேவி,பூமாதேவி ஆகியோர்களுக்கு விசேட அபிஷேகங்கள்,ஆராதணைகள் என்பன சிறப்பாக இடம்பெற்றதுடன் அங்கு இருந்து உள்வீதியூடாக வலம் வந்து வெளிவீதியில் தேரில் வீற்று காத்தல் ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஐப்பெருமாளாக அருள்பாலித்தனர்.
இவ் மஹோற்சவத்தினை ஆலய பிரதம சிவ ஸ்ரீ.க.ச சோமசுந்தரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் இவ் மஹோற்சவத்தினை நடாத்திவைத்தனர்..
இவ் மஹோற்சவம் கடந்த 27.08.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமாகி 13.09.2017 தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடையும். இங்கு பெருந்திரளான பக்தர் அடியார்கள் பலரும் கலந்து கொண்டு வரதராஐப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூமாதேவி ஆகியோர்களின் அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.










No comments

Theme images by mammuth. Powered by Blogger.