ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த பிரான்சுவா ஹுட்டார்ட் கியூட்டோவில் காலமானார்.
ஈழ தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு நல்ல இதயம் தனது துடிப்பினை நிறுத்தி கொண்டது.
ஈழத்தமிழர்களின் நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், வாழ்நாள் பேராசிரியருமான 92வயது பிரான்சுவா ஹுட்டார்ட் கியூட்டோவில் கடந்த வியாழன் கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.