வடக்கில் வரட்சி அனர்த்தம்!
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாகவும் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், வரட்சி காரணமாக 14,685 குடும்பங்களைச் சேர்ந்த 410,703 பேர் கடும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்ற நிலையில்,
குறிப்பாக யாழ். தீவகப் பகுதிகளில் குடி நீரின்மை காரணமாக மக்கள் இடம்பெயருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவுகின்ற அதிக காற்று காரணமாக சுமார் 25 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
கடும் வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாண மக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிவாரண மற்றும் இழப்பீட்டு செயற்பாடுகள் என்ன?
அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தவிர்ந்த, தங்களது இருப்பிடங்களை சுத்தம் செய்து வரும் மக்களுக்கும், தூர கஷ;டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கும் நிவாரணங்கள் உரிய முறையில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகின்றது.