யாழ் கோப்பாய்ப் பகுதியில் பொலிசார் மீது வாள் வெட்டு!! கடும் பதற்றம்!!

கோப்பாய் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு போலீசார் விசாரணைக்கு சென்ற போது இருவரின் மீதும் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது .

யாழில் ஆவா குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள பொலிஸார் இருவரே இந்த வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கிகளை கொண்டு செல்லாமல் பொது மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே ஆவா குழுவினர் இவர்களை பின் தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள இரு பொலிஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார், படுகாயமடைந்த இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.