மிரட்டும் ஓட்டுனர்கள் கைப்பிடியில் பயணிகள் - இலங்கை மக்கள் அவலம்
இலங்கை போக்குவரத்தை பொறுத்தவரை பேருந்துகளை நம்பிய மக்களின் , ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகம் . ஆனால் பல சாரதிகளின் கவனயீனமான நடத்தை , அசமந்த போக்கு என்பன பல மக்களை அச்சுறுத்தலான வாழ்வையே வாழச் செய்துள்ளது. இவ்வாறான சாரதிகள் போலீசாரால் எத்தனை முறை எச்சரிக்கப்பட்டாலும் அவர்களின் சுபாவமோ மாறுவதாக இல்லை. இதனை மக்கள் மட்டுமே தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் போலீஸாரது துணையோடு. காரணம் சிலர் அரசியல் செல்வாக்கையோ / அடிதடி மூலமாகவோ உங்களை அச்சுறுத்த அதிக வாய்ப்புள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமெனில் சாரதிகள் தாமாக உணர்ந்து சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இவ்வாறான சாரதிகளின் அனுமதி பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு அவரை வாகனங்கள் செலுத்த தகுதியற்றவராக்கி தண்டனை வழங்க வேண்டும்.
