தனியாக விமானத்தில் உலகைச் சுற்றும் பெண் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கினார்!
ஒற்றை இயந்திர விமானத்தில், உலகத்தைச் சுற்றி வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, ஆப்கான் தேசிய விமான சேவையின் பெண் விமானி தீடீரென இலங்கையில் தரையிறங்கியுள்ளார். இலங்கையை அவர் முதலில் தரிப்பிடமாக தெரிவு செய்யாத போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவர் தனது விமானத்தை இலங்கையில் தரையிறக்கியுள்ளார்.
Beechcraft Bonanza A36 என்ற விமானத்தில் உலகம் முழுவதும் பயணிக்கும் அவர் 18 நாடுகளில் 30 இடங்களில் விமானத்தை தரையிறக்கியுள்ளார். அவரது பிறப்பிடம் ஆப்கான் என்ற போதிலும் விமானிக்கான கற்கை நெறிகளை அமெரிக்காவில் மேற்கொண்டுள்ளார். விமான சேவை துறையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் அடுத்த பரம்பரையில் பெண்கள் விமான துறையில் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்பதே அவரது பயணத்தின் பிரதான நோக்கமாகும்.
உலகம் முழுவதும் 130,000 விமானிகள் உள்ள போதிலும் 4000 பெண் விமானிகள் மாத்திரமே செயற்படுகின்றனர். இந்த நிலையில் ஆப்கான் விமானியின் வரவேற்கும் நிகழ்வு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments