116 பேருடன் மாயமான மியான்மர் விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடலில்

யாங்கூன்,
மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது விமானம் மாயமானது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Theme images by mammuth. Powered by Blogger.