100 வது நாளாக தொடர்ந்த பட்டதாரிகளின் போராட்டம் 200 ஐ அடைய அரசு ஆவல் கொள்கிறதோ ?

பல்வேறு சவால்களை முகம்கொடுத்து பல்கலைக்கழக கல்வியை முடிவுசெய்து வெளிவரும் மாணவர்களின் இவ் அவல நிலை அரசின் பார்வைக்கு எப்போது சென்றடையும் ?
தகைமைகள் தகுதிகள் இல்லாத பலரும் தற்போது அந்தஸ்த்தை , அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி அரசாங்க வேலைகளை பெற்றுக்கொள்ளும் போது ஏன் இவ்வாறான பல்கலைக்கழக கல்வியை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற மனோபாவத்தை எதிர்கால சந்ததியினரிடையே விதைத்து விடாதீர்கள் .....
வடமாகாணத்தை பொறுத்தவரையில் எத்தனைபேர் தகுந்த கல்வித் தகைமைகளுடன் அரச பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் ?
எத்தனைபேர் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கே வந்து அரச பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ?
வெளிவாரி பட்ட படிப்பை முடித்து எத்தனைபேர் அரச பணிகளில் உள்ளனர் ?
க பொ த உயர்தர பெறுபேறுகளை மட்டுமே கொண்டு எத்தனை பேர் அரச பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் ?
இதனை அரசு கவனத்தில் கொண்டால் ஏன் பல்கலை கழக கல்வி ?
இதற்காக அவர்களது பணிகள் தவறு என கூறுவது எம் நோக்கமல்ல . பட்ட படிப்பை முடித்து வெளிவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எம் நோக்கம் .
போட்டி பரீட்ச்சை என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்களை புறக்கணித்து வெளியேற்றும் பாங்கு இல்லாதொழிய வேண்டும்  
அத்துடன் அவரவர் துறைகளுக்கான பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் 
இவ்வாறு செய்தால் நாட்டின் அபிவிருத்தி இன்னமும் மெருகேறும் என்பதே எமது நோக்கம் 

தமிழ் யாழ் செய்திகளுக்காக ஞா . நிரோஜன் 

Theme images by mammuth. Powered by Blogger.