ஓவியர் வீரசந்தானம் அவர்கள் சென்னையில் காலமானார்.(13-07-2017)
ஓவியர் வீரசந்தானம் அவர்கள் சென்னையில் (13-07-2017) காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார்.
ஓவியர் வீரசந்தானம் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் மதிக்கத்தக்க கலை ஆளுமை.மண்ணையும் மக்களையும் உயிராக நேசித்த ஒரு கலைஞன்.
மக்களுக்கான கலையையும்,மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த இந்த கலைஞனின் ஓவியங்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை `தக்ஷன் சித்ரா’வில் உள்ளது.
மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனர் வேலை செய்த அய்யா வீரசந்தானம் அவர்கள் வடிவமைத்தது தான் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்.ஈழத் தமிழர்களின் நினைவகம்.சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார். 25 ஆண்டுகள் அங்கு கடும் பணி.
என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்'' என்று செய்து வந்த வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்தவர் அய்யா வீரசந்தானம் அவர்கள்.
அதன் பிறகு,
இன்றைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக நின்று குரல் கொடுத்தவர்.
''என் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. தமிழனுக்கு, தனித்த கலாசாரம் இருக்கு; தொன்மையான பண்பாடு இருக்கு; வரையறுக்கப்பட்ட நிலமும் வாழ்வாங்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு. அதனால அவனை ஒண்ணுசேரவிடக் கூடாது. அவன் இனமான உணர்வோடு இருக்கக் கூடாதுனு இப்பவும் ஒரு கூட்டம் வேலைபார்க்குது.அத தமிழர்கள் ஒன்று கூடி முறியடிக்கனும்'' என சாகும் வரை முழங்கிய அய்யா வீரசந்தானம் அவர்களுக்கு,
தமிழர் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.