சுதுவையின் மருமகள் ரம்பாவின் சுதுவை விஜயம் - புகைப்படங்கள்

சுதுவையின் மருமகள் ரம்பாவின் சுதுவை விஜயம் புகைப்படங்கள்

 தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா ஈழத்து சுதுவை மைந்தனை திருமணம் செய்து இல்லற இல்லத்தரசியாக தற்போது வாழ்ந்துவருவதும் , திரைப்பட உலகிலிருந்து பலகாலம் விலகி குடும்ப தலைவியாக மட்டுமே வாழ்ந்துவருகின்றார் என்பதும் யாவரும் அறிந்ததே. 
நேற்றையதினம் முன்னாள் நடிகையும் சுதுவையின் மருமகளுமான ரம்பா சுதுவை வந்துள்ளார். சாதாரண பெண்மணியாக கலாச்சார கோலங்கள் மாறாத நிலையில் எல்லோருடனும் புன்னகை முகத்துடன் பழகி அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து எல்லோரையும் மதித்த அவரது குணத்தை நேற்றையதினம் எல்லோரும் நேரில் கண்டிருந்தனர்.
ரம்பாவின் கணவர் தான் கற்ற கல்லூரியான மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு தன் குடும்ப சமேதராக சென்றுவந்தார். அங்கே மாணவர்களதும் ஆசிரியர்களதும் அன்பும் வரவேற்பும் ரம்பாவுக்கு கிடைத்திருந்தது. அடுத்து சுதுமலை அம்பாள் ஆலயத்தையும் குடும்ப சமேதராக சென்று தரிசித்துள்ளனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் எந்தவித ஆரவாரமும் பெருமிதமும் இல்லாமல் சாதாரண பெண்மணியாகவே ரம்பா வலம்வந்தபோதிலும் இளைஞர்களது ஆரவாரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவே இல்லை என்றே கூறவேண்டும் 
திரைப்பட உலகைவிட்டு அவர்கள் விலகி இருந்தாலும் ரம்பாவிற்கான ரசிகர் என்ற வட்டம் இன்னமும் உண்டு என்பதே உண்மை.

இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா.
இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார்.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Theme images by mammuth. Powered by Blogger.