வேலிப்பருத்தி - பருத்தலான் கொடி

நம்மூர் வேலிகளில் படர்ந்துகிடக்கும் மூலிகை தாவரம். ஏறுகொடி வகையை சார்ந்த இத்தாவரம்  இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், ஆபிகானிஸ்தான் , அரேபிய என்று உலகின் பல பாகங்களில் இக்கொடி காணப்படுகிறதாம்.


இதன் இலைகள் பச்சையும் பழுப்பும் நிறமும் கொண்டு இதயவடிவில் காணப்படும், இரட்டை காய்களை கொண்டு இருக்கும்.. வெடித்து பரவுதல் மூலமாக இதன் விதைகள் பரவி புதிய கொடிகள் உருவாகும்.
இதன் இலை, மற்றும் வேரில் மிகுந்த மருத்துவகுணம் நிரம்பி உள்ளது. ஆஸ்துமா, காச்சல், பக்கவாதம், கோழை அகற்றுதல், உடல் வலுப்பெற, பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள், மற்றும் பல நோய்களுக்கு இக்கொடி மருந்தாக பயன்படுகிறது.
 இன்றும் கூட கிராமங்களில் இதன் காயை பொரியல் செய்து உண்பார்கள். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால். வேலியில் கிடக்கும் "பருத்தலான்" செடி காய்களை பிடுங்கி வந்து, உள்ளே இருக்கும் விதைகளை அப்புறப்படுத்திவிட்டு , அரிந்து நறுக்கி, பொரியல் செய்வார்கள்.. கசப்பு சுவையுடன் நன்றாகவே இருக்கும்.


Theme images by mammuth. Powered by Blogger.