மீதொட்டமுல்லை குப்பைமேட்டு விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடி

மீதொட்டமுல்லை குப்பைமேட்டு விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடி,ஏரா­ள­மான உயிர்­களை பலி­கொ­டுக்க இதுவே காரணம்!


கொழும்பு மாந­கர எல்­லையில் குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் இடம்­பெற்­றுள்ள மோசடி தொடர்பில் கொழும்பு மாந­கர ஆணை­யாளர் உட்­பட உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­ய­வுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் முன்னாள் உறுப்­பினர் மஹிந்த ஹந்­த­கம தெரி­வித்தார். கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
கொழும்பு மாந­கர எல்­லையில் குப்பை முகா­மைத்­துவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒதுக்­கப்படும் நிதியில் ஏரா­ள­மான மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. மாந­கர ஆணை­யாளர் உட்­பட உய­ர­தி­கா­ரி­களும் குறித்த ­மோ­ச­டியில் தொடர்பு பட்­டி­ருக்­கின்­றனர். எனவே குறித்த ­மோ­ச­ டிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் ­கு­ழுவில் கடந்த 7 ஆம் திகதி ஒரு முறை­பாடு செய்­துள்ளேன். மேலும் மூன்று முறைப்­பா­டுகள் செய்­ய­வுள்ளேன்.
அத்­துடன் மீதொட்­ட­முல்லை குப்­பை­மேட்டு விவ­கா­ரத்தில் உள்­ளக ரீதியில் பாரிய நிதி மோசடி இடம்­பெற்­றுள்­ளது. அத­னா­லேயே குப்­பை­மேடு சரிந்து வீழ்ந்­ததில் ஏரா­ள­மான உயிர்­களை பலி­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது.
ஏனெனில் மீதொட்­ட­முல்லை குப்­பை­மேட்டை அழுத்தி மட்டப்படுத்­து­வ­தற்கு தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு அதி­க­ள­வான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக தரவுகள் உள்­ளன. அதற்­கி­ணங்க 2010 ஆம் ஆண்டு குப்­பை­மேட்டை அழுத்தி மட்டப் படுத்­து­வ­தற்கு 39 மில்­லியன் ரூபாவும் 2011 ஆம் ஆண்டு 49 மில்­லியன் ரூபாவும், 2012 ஆம் ஆண்டு 56 மில்­லியன் ரூபாவும், 2013 ஆம் ஆண்டு 37 மில்­லியன் ரூபாவும், 2014 ஆம் ஆண்டு 43 மில்­லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு 182 மில்­லியன் ரூபாவும், 2016 ஆம் ஆண்டு 232 மில்­லியன் ரூபாவும் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.
அந்­நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­ட­போ­திலும் அதற்­கான பணிகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. அப்­ப­ணிகள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் முடி­யு­மா­ன­ளவு சேதங்­களைத் தவிர்த்­தி­ருக்­கலாம். ஆகவே அந்­நி­தியை அதி­கா­ரிகள் மோச­டி­யான முறையில் தமக்குள் பகிர்ந்­து­கொண்­டுள்­ளனர்.
அத்­துடன் மீதொட்­ட­முல்­லையில் இரு வரு­டங்கள் மாத்­திரம் குப்பை கொட்­டு­வ­தற்கு 2009 ஆம் ஆண்டில் நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யது. எனவே 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நீதி­மன்றின் அனு­ம­தி­யின்றி அங்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றின் தீர்மானத்திற்கு எதிராக குப்பை கொட்டப்பட்டிருப்பதனால் அங்கு இடம் பெற்ற உயிரிழப்புகளை கொலையாக கருத வேண்டியுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Theme images by mammuth. Powered by Blogger.