வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி: கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர் விமானங்கள்
வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா.வின் தடையையும் மீறி 2-வது முறையாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இந்த ஏவுகணையால் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அழித்துவிட முடியும் எனவும் வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா தனது போர் விமானங்களை கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
தென் கொரியாவிற்கு வந்த அமெரிக்காவின் பி-1 போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பலமுறை பறந்தன. தென்கொரியாவின் விமானப்படை தளத்திற்கு மேல் பறந்த அமெரிக்க போர் விமானங்களுக்கு பறந்த படியே எரிபொருள் நிரப்பும் காட்சிகளை அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் போர் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது விமானங்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. அமெரிக்க போர் விமானங்களுடன் தென்கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் இந்த பதில் நடவடிக்கையில் ஈடுபட்டன.
No comments