தமிழ்நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டவர் செல்வி.ஜெயலலிதா - ப.சிதம்பரம்


மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா தமிழ்நாட்டை இரும்புக் கரம் கொண்டு ஆண்டவர். அவருடைய ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து வளர்ந்த போதிலும் ஒரு செயல்படக் கூடிய அரசாக இருந்தது. ஜெயலலிதா மறைந்து விட்டார் ( அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்) இப்போது அவர் ஆட்சியை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி , தமிழ் நாட்டில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? 
அதிமுக என்ற கட்சியையும் , 234 MLAக்கள் இருக்கும் சட்டமன்றத்தில் 135 MLAக்களின் ஆதரவோடு தலைமையேற்று நடத்திய அரசையும் தனக்கு பிறகு தலைமையேற்று வழி நடத்த ஒரு தலைவரை அவர் அடையாளம் காட்டாமல் மறைந்து விட்டார். ஒருவேளை அவர், தான் குணமடைந்து விடுவோம் என்று நினைத்திருக்கலாம் அல்லது திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களை இரண்டு முறை முதல்வர் பொறுப்பில் நியமித்ததால் அதுவே போதும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம் இல்லையென்றால் தனக்கு பிறகு என்ன நடந்தாலும் கவலையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இரண்டு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.
1.சசிகலாவை ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை.
2. 2011 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் நெருங்கிய உறவினர்களை ஜெயலலிதா கட்சியில் சேர்க்கவில்லை.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா கட்சியை கைபற்றிவிட்டார். முதலில் கட்சியின் பொதுச் செயலாளராகும் முயற்ச்சியில் வெற்றி பெற்றார். பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் நாற்காலியில் அமருவதற்குள் உச்சநீதி மன்ற தீர்ப்பு அவருடைய கனவை கலைத்தது. சசிகலா பிறகு பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். பிறகு MLAக்கள் மூலம் திரு.எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக்கினார். வேறு வழி இல்லாததால் ஆளுநர் அவருக்கு பதவி பிராமானம் செய்து வைத்தார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அதிமுக உடைந்தது. ஆரம்பத்தில் இரண்டாக உடைந்தது தற்போது மூன்று அணிகளாக பிரிந்து இருக்கிறது. கட்சி மூன்று அணிகளாக பிரிந்து கிடந்தாலும் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எதுவும் நடக்காதது போல ! பட்ஜெட் கூட்டத்தொடர் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது, யாரும் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. MLAக்களின் இந்த செயல் அதிசயமாக இருக்கிறது. 
அதிமுக அணிகளுக்குள் நடக்கும் கேலிக்கூத்துகளுக்கு காரணம் பா.ஜ.க தான் என்று நம்பப்படுகிறது. தமிழக அரசியலில் தனக்கு ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள பா.ஜ.க வின் ஒரு திட்டமாக கூட அது இருக்கலாம். குடியரசு தலைவர் தேர்தலுக்கு அதிமுக வின் ஆதரவை பெறுவதற்கான ஒரு திட்டமாக கூட இருக்கலாம். ஆனால் அதிமுக வுடன் கூட்டனி வைப்தற்காகத்தான் பா.ஜ.க இவ்வாறு சூழ்ச்சிகளை செய்கிறது என்றால் பல கேள்விகள் எழும்.
இன்று , அதிமுக கட்சியையும் , ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த ஒருவரும் இல்லை. தினமும் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாக எழுப்பப்படுகிறது, அதை பற்றி ஆளுகின்ற அதிமுகவில் யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை தவிர பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் பிடியில் தாங்கள் இருப்பதை நினைத்து அவர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை மேலும் இந்த ஆட்சி கவிலாது என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பல இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் தமிழ் நாடு முழுவதும் நடந்தன. ஒரு சுரங்க நிறுவனத்தில் ட கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நடந்த சோதனையில் 135 கோடி ரொக்கப் பணம், 177 கிலோ தங்கம் பிடி பட்டது. அந்த சோதனையை தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீடுகளிலும் , தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துரை சோதனை நடைப்பெற்றது.
2017 ஏப்ரல் 4 ஆம் தேதி சுகாதாரத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துரையினர் சோதனை நடத்தினர்,சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக செய்திகள் வந்தன. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் யார் யாருக்கு எவ்வளவு என்று முதல்வர் உட்பட மற்ற ஆறு அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம் சோதனையில் சிக்கியது.பண பட்டுவாடா குற்றச்சாட்டுகள் அதிகமாக வந்ததையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது. 2017 ஏப்ரல் 18 ஆம் தேதி முதல்வர் மற்றும் ஆறு அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது தேர்தல் ஆனையம்.
இரண்டு வாரத்திற்கு முன்னால் ஒரு செய்தித் தாளில் வந்த செய்தி , குட்கா உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நடந்த சோதனையில், அமைச்சர்களுக்கும், காவல் துறை உயரதிகாரிகளுக்கும் பணம் லஞ்சமாக தரப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது பற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பட்டிருக்கிறது ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தமிழக அரசின் நிர்வாகத்தின் ஊழல் மலிந்து விட்டது. உணவகங்களில் ஒவ்வொரு உணவிற்க்கும் தனி விலை இருப்பது போல இங்கு ஒவ்வொரு காரியத்தை முடித்து கொடுக்க தனி விலை. இந்த ஆட்சியில் ஊழல் மேலிருந்து கீழ் வரை முறைபடுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் MLA அவர் தொகுதிக்கு ஒரு முதல்வர் போலவும், அந்தந்ந மாவட்ட அமைச்சர்கள் அவர்கள் மாவட்டத்திற்கு முதல்வராகவும் செயல்படுகிறார்கள்.
இதற்கிடையில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. 2017- 2018 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்தி பதினான்காயிரத்தி முந்நூற்று முப்பத்தாறு கோடி ( Rs 3,14,336 crore) ஆக இருக்கும். இது அரசுக்கு கிடைக்க வேண்டிய 1,59,363 கோடி வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம். TANGEDCO நிறுவனத்திடமிருந்து மாநில அரசு கடனாக 22,815 கோடி பெற்றது இதனால் 2016-17 ஆம் நிதியாண்டில் மாநில அரசுக்கு 4.58 சதவிதம் நிதி பற்றாக்குறை ஏற்ப்பட்டது. மொத்த மாநில உற்பத்தியில் கடன் சுமை 20.9 சதவிதம் உயர்ந்திருக்கிறது. சுகாதாரத்துறையில், நகரப்புற வளர்ச்சித்துறையில் அரசு, திட்டத்திற்கான நிதியை ஒதுக்கிடு செய்தது மிக குறைவு.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளில் மக்களுக்கு சேர வேண்டிய நிதியை அவர்களே திருடுகிறார்கள். இந்த செயலற்ற ஆட்சியால் தமிழ் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. யாரையும் மக்கள் பணத்தை திருட விடமாட்டேன் என்று பிரதமர் சொன்னார் ! அப்படியானால் அதிமுக கட்சியுடனும் அரசுடனும் பாரதிய ஜனதா கட்சி நட்பு பாராட்டுவது ஏன் என்று நாட்டு மக்களுக்கு விளக்குவாரா?
Theme images by mammuth. Powered by Blogger.