மணிக்கணக்கில் தற்காலிக ஊற்றுத் தோண்டி தாகம் தீர்க்கும் தனுஷ்கோடி மக்கள்
மினரல் குடிநீரே வாழ்க்கையாகிப் போன இந்த நவீன காலத்திலும் ஊற்றுத் தண்ணீரை நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குடிநீருக்கான வசதியை இராமேஸ்வரம் நகராட்சி செய்து தராத போதிலும், மணிக்கணக்கில் தற்காலிக ஊற்றுத் தோண்டி குடம் நிரப்பி தாகம் தீர்க்கும் தனுஷ்கோடி மக்களின் அவலம் சொல்லி மாளாது.