திருச்சியில் ஈழ அகதிகள் காலவரையறை இன்றி உண்ணாவிரதம்
தமிழகத்தில் திருச்சியில் ஈழ அகதிகளை காரணம் இன்றி பொய்களை கூறி ஆண்டு கணக்காக நான்கு சுவருக்குள் அடைத்து வதைக்கும் கொடிய சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாமில் வாழும் எம் உறவுகள் இன்று முதல் தம்மை விடுதலை செய்யுமாறு வேண்டி காலவரையறை இன்றி உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.
அரசு ஈழ தமிழர்களின் துயரம் தீர்த்து சிறப்பு முகாமை மூடி ஈழ அகதிகளை அவர்கள் உறவுகளோடு இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும்.
இன்றைய நாள் முதலாம் நாளாக கொண்டு போராட ஆரம்பித்துள்ள இவர்கள் இதற்கு முன்பும் பல முறை நீதி வேண்டி போராடியவர்கள் என்பதும் அதை இந்திய அரசு முடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராடும் உறவுகளின் விபரம்.
- சுதர்சன் த/பெ. சுதாகரன்
- தயாகரன் த/பெ. கிருஷ்ணபிள்ளை
- குருவிந்தன் த/பெ. உமாகாந்தன்
- தர்சன் த/பெ. ஜெகதீபன்
- சத்தியசீலன் த/பெ. கந்தசாமி
- ரொபின்பிரசாத் த/பெ. சகாயநாதன்
- காந்தரூபன் த/பெ. சிவசுப்பிரமணியம்
- குணசீலன் த/பெ. நாகராஜன்
- யோககுமார் த/பெ. ரகுநாதன்
- தயானந்தன் த/பெ. நமசிவாயம்
கண்ணீரோடு வாழும் இவர்கள் வாழ்வு விடிய வேண்டும். போராட்ட கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டு சிறப்பு முகாம் மூடப்பட்டு இவர்கள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள் என நம்புவோம்.