யாழ் கொக்குவில் நடு வீதியில் உணவை சாப்பிட்ட வயோதிப மூதாட்டி : பகிர்வோம் முதியவர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கும்வரை

யாழ் கொக்குவில் சந்திப் பகுதிக்கு அருகில் நடு வீதியில் வைத்து தனது உணவை சாப்பிட்டுள்ளார் மன நலம் குன்றிய வயோதிப மூதாட்டி ஒருவர்.

இவர் நடுத்தெருவில் வைத்து சாப்பிடுவதை அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்தவர்களும் வீதியால் சென்றவர்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர அந்த மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல நீண்ட நேரமாக யாரும் முன்வரவில்லை என தெரிகின்றது.
பின்னர் இதனை அவதானித்த வீதியால் சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் “ இந்த மூதாட்டியின் செயலையும் இவ்வாறு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்களே” என கவலையுடன் தெரிவித்துவிட்டு மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார் என தெரியவருகின்றது.
இதேவேளை, யாழ் நகரில் அண்மையில் பிரபல்யமான உணவு விடுதி ஒன்று வீதியில் இருந்த முதியவர்க்கு தண்ணீர் ஊற்றி கலைத்தத்து யாரும் அறிந்ததே.
Theme images by mammuth. Powered by Blogger.