மர்ம மிருகங்களால் ஆடு மாடுகள் பலியாகும் சம்பவம். பொதுமக்கள் பதற்றம்....
ஆலவயல் ஊராட்சி ஈசிகூடத்தில் மர்ம மிருகம் தாக்கி மூன்று ஆடுகள் பலியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் ஆலவயல் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று மர்ம மிருகங்களால் பலியானது. அதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு ஆலவயல் தெற்கிக்காடு பகுதியை சேர்ந்த மலையாண்டி மனைவி பாக்கியம் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகள் மர்ம மிருகங்களால் பலியானது. இச்சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது..
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்...
இரவு எந்த சத்தமும் வரவில்லை. ஆனால் விடியற்காலை மாடு இறந்துகிடக்கின்றது. கழுத்தில் மட்டும் காயம் அந்த இடத்தை கடித்து இரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது. இது போன்ற மர்மமிருகங்களால் நாங்கள் வெளியில் வரக்கூட பயமாக உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அன்று மாடு இன்று மூன்று ஆடுகள் பலியாகியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் செல்வக்கணபதி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் உள்ளிட்ட பலர் இறந்து ஆடுகளை நேரில் பார்த்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். இறந்த ஆடுகளை மருத்துவர்களை கொண்டு ஆலோசித்து பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்..
இதே போல் பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பூலாங்குறிச்சி, மலையடிப்பட்டி, ஆத்தூர், திருக்கோளக்குடி, செவலூர் கருகாம்பட்டி ஆகிய பகுதிகளை சுற்றிவளைத்து மர்ம மிருகங்கள் வேட்டையாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். அரசு உடனே நடவடிக்கை எடுத்து விலங்குகள் காக்க வழிசெய்யவேண்டுமென பொதுமக்கள் கூறிகின்றனர்.