எனது ஆசிர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது - ஜனாதிபதி

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற எவர் கனவு கண்டாலும் அதற்காக தமது ஆசிர்வாதமும் அங்கீகாரமும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்; கவிழ்க்கப்படும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவை வென்றாலும் அரசியல் யாப்புக்கு அமைய புதிய அரசாங்கத்தை தமது ஆசிர்வாதம் இன்றி ஸ்தாபிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தடைகள் அனைத்தையும் நீக்கி அரசாங்கம் முன்னோக்கி செல்லும் வேளையில், ஒருசிலர் பதற்ற நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
சில ஊடகங்களின் உண்மைகளுக்கு அன்றி போலி விடயங்களை பரப்புவோருக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றை மாற்றியமைத்து நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பும் தமது தலைமைத்துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.