இலங்கையில் மூன்று பிள்ளைகளின் கைகளையும் பின்புறமாக கட்டி தூக்கிலிட்டு கொலை செய்த தந்தை…

மாத்­தறை கம்­பு­று­பிட்­டிய பிர­தே­சத்தில் நபர் ஒருவர் தனது பிள்ளைகள் மூவரை தூக்­கி­லிட்டு கொலை செய்­ததன் பின்னர் அவரும் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
கம்­பு­று­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெர­லி­அத்­துர பிரதேசத்தில் வீடொன்று தீப்­பற்றி எரி­வ­தாக கம்பறுபிட்­டிய பொலிஸாருக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்­க­மைய நேற்­று­முன்­தினம் இரவு சம்­பவ இடத்­துக்கு பொலிஸார் சென்­றி­ருந்­த­போது அவ்  ­வீடு முழுமை­யாக தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது.


இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்தில் பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது தீக்­கி­ரை­யான வீட்­டுக்கு முன்­பாக அமைந்­தி­ருந்த இரண்டு மரங்­க­ளுக்கு குறுக்­காக இடப்­பட்­டி­ருந்த மூங்கில் தடி­யொன்றில் கட்­டப்­பட்­டி­ருந்த கயிற்றில் தொங்­கிய நிலையில் காணப்­பட்ட தந்தை, அவ­ரது மகன், மகள்மார் இருவர் உட்­பட நால்­வரின் சட­லத்தை பொலிஸார் கண்­டு­ பி­டித்­தனர்.
சந்­தேக நப­ரான தந்தை தனது பிள்­ளைகள் மூவரின் கைகளை பின்­பு­ற­மாக பிணைத்து கட்­டி­யதன் பின்னர் அவர்­களை தூக்கிலிட்டதோடு வீட்­டையும் தீயிட்டுக் கொளுத்­தி­விட்டு அவரும் தற்­கொலை செய்­துள்­ள­தாக சம்­பவம் தொடர்­பான ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வர்கள் பதி­ரண பிரி­யந்த (44) என்ற தந்தை, மகள்­க­ளான 16 வய­தான கௌசல்யா செவ்­வந்தி, 10 வய­தான ஹிருணி செவ்­வந்­திகா மற்றும் மக­னான 14 வய­தான இளம் பிக்கு என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் இடம்­பெற்ற வேளையில் வீட்­டுக்கு வந்­தி­ருந்த குறித்த பிக்கு இந்த துர­திர்ஷ்­ட­மான சம்­ப­வத்­துக்கு முகங்­கொ­டுத்­துள்ளதாக தெரிய வந்­துள்­ளது.

உயி­ரி­ழந்த பிள்­ளை­களின் தாய் மற்றும் தந்தை ஆகி­யோ­ரி­டையே ஏற்­பட்ட தனிப்­பட்ட தக­ராறின் கார­ண­மாக அப்­பிள்­ளை­களின் தாய் சுமார் 1 மாதத்­துக்கு முன்னர் தனது பிள்­ளைகள் மற்றும் கண­வரைப் பிரிந்து சென் றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சடலங்கள் மீதான நீதிவான் மற்றும் மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ள அதேவேளை கம்புறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
Theme images by mammuth. Powered by Blogger.