மாநகர சபை கழிவுகளால் அல்லலுறும் மட்டு மக்கள்
மட்டக்களப்பு மாநகர சபையால் திருப்பெரும் துறையில் திண்ம கழிவுகளை கொட்டுவதனால் மக்கள் மிகவும் அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
மிகவும் மோசமான துர்நாற்றத்துடனும் அதிகளவிலான இழையான்களுக்கு மத்தியிலும் ஒரு நரக வாழ்க்கை வாழ்வதாக தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
மலசல கழிவுகளை கொட்டுவதனால் சுகாதாரம் பாரிய கேள்விக் குறியாகியுள்ளதோடு குடி நீர் மாசடைவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அடிக்கடி உடல் சுகயீனங்களுக்குள்ளாகின்றனர் என கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களின் இந்த துயர நிலைக்கு அரசியல் வாதிகளே காரணம் எனவும், குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்தும் எதுவித நடவடிக்கையும் எவரும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாற்றுகின்றனர்.
தற்போது பரவியுள்ள தீயினால் சுவாசிக்க முடியாமல் சிறுவர்களையும், குழந்தைகளையும் வைத்துக்கொண்டு இப் பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


No comments