ஆடை தொழிற்சாலையொன்றில் திடிரென 200 பெண் பணியாளர்கள் மயக்கமுற்ற நிலையில்


இலங்கையில் மலையகத்திலுள்ள ஆடை தைக்கப்பட்ட தொழிற்சாலையொன்றில் பணியில் இருந்த சுமார் 200 பெண் பணியாளர்கள் திடிரென மயக்கமுற்ற நிலையில் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டம் டிக்கோயா பிரதேசத்தில் அந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று புதன்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறை தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சௌதி பெண்கள் கார் ஓட்டினால் இந்திய, இலங்கை பணியாளர்கள் பாதிப்படைவார்களா? இலங்கையில் மண்சரிவு அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்! இருந்த போதிலும் அவர்கள் மயக்கம் அடைந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என டிக்கோயா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.