கண்டியில் மணப்பெண் மிக நீள புடவை அணிந்த நிலையில் கின்னஸ் சாதனை முயற்சி


கொழும்பு : கண்டியில் புது மண தம்பதி கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதற்காக மணப்பெண் மிக நீள புடவை அணிந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை பயன்படத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கண்டியின் கன்னோரு பிரதேசத்தில் கின்னஸ் சாதனைக்காக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது. இந்த திருமணத்தில் மணப்பெண் சுமார் 3 ஆயிரத்து 200 அடி நீள ஒசரி புடவையை அணிந்திருந்துள்ளார். மணமக்கள் கண்டி முதல் கொழும்பு வரையிலான வீதியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்காவின் அலவத்துகொடி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.