இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைது
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 5 பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்தின் மீது கனகராயன் குளம் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.