ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளுகின்ற விதமும் அதற்காக தரவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளும் விடய அணுகுமுறையியல் ஆகும். ஆயு;வு என்பது காணப்படுகின்ற விடயங்கள், தோற்றப்பாடுகள், நிகழ்வுகள் தொடர்பானவற்றை விஞ்ஞான ரீதியான துறைகளைப் பயன்படுத்தி அவை தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுவதற்குச் செய்யும் முயற்சியே ஆகும். உளவளத்துணை ஆய்வு என்பது ஒரு தனி மனிதனின் உளத்தை விளங்கிக் கொள்ளுவதற்கான தேடல் ஆகும். உளவியல் பல வகைப்படம். ஆய்வின் விடயம், நோக்கம் என்பவற்றைப் பொறுத்து விடய அணுகு முறையியல்களும் வேறுபடுகின்றன.
3.1 தகவல் திரட்டல் முறைமை
தரவு சேகரிப்பு முறைகள், பிரச்சினைகள் பகுப்பாய்வு முறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த அத்தியாயமானது காணப்பபடுகின்றது. ஆய்வினை மேற்கொள்ளுவதற்கான தரவு சேகரிப்பு முறையாக கள ஆயு;வு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கள ஆய்வு என்பது ஆய்வாளன் ஆய்வு பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்தலும், ஆய்விற்குட்பட்டோருடன் கலந்துரையாடியும் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் முறையாகும். பிரச்சினையோடு வரும் துணைநாடியை அப்பிரச்சினையிலிருந்து விடுபட உதவுவதற்கு தரவு மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தரவு மூலங்கள் இருவகைப்படும்.
1. முதலாம் நிலைத் தரவுகள்.
2. இரண்டாம் நிலைத் தரவுகள்
முதலாம் நிலைத் தரவுகள்.
முதலாம் நிலைத் தரவுகள் என்பது ஆய்வினை மேற்கொள்ளுபவர் ஆய்வு பிரதேசத்திலிருந்து நேரடியாக திரட்டிக் கொள்ளும் தரவுகள் ஆகும். இத்தரவுகள் நம்பிக்கைத்தன்மை கூடியவையாகும். இக்களப்பணி ஆய்வின் போது முதலாம் நிலைத் தரவுகளை சேவைநாடியிடம் அமர்வுகளின் போது பெறப்பட்டது.
எட்டு அமர்வுகளின் போதும் சேவைநாடியிடமிருந்து பெறப்பட்ட வாய்மொழியற்ற தரவுகளும் கள மேற்பர்வையாளரிடமிருந்தும் பெற்ற தரவுகளும் முதலாம் நிலைத் தரவுகளாக உள்ளன. இங்கு துணைநாடியினுடைய உடல் மொழி ரீதியாக அவர் மிகவும் பீதி நிலையில் இருந்தார். படபடப்பாக அவருடைய உடல் காணப்பட்டது. முகம் வாடிப்போய் இருந்தது. தொனி மிகவும் தாழ்வான சத்தமாக காணப்பட்டது.
இரண்டாம் நிலைத் தரவுகள்
சேவைநாடியிடம் வெளிப்பட்ட உள நோய் நிலைமை. அது தொடர்பான விளக்கம். பகுப்பாய்வு செய்தல் மற்றும் சிகிச்சை திட்டமிடல் போன்ற செயற்பாடுகளுக்கான தகவல் திரட்டல் ஆனது இரண்டாம் நிலைத் தரவு திட்டமிடல் மூலம் இடம் பெற்றது. இதற்கு பதிவேடுகள், அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள், இணையம் போன்றன பயன்பட்டது.
3.2 கணிப்பீட்டு முறைமை
சேவைநாடியிடம் காணப்பட்ட குணங்குறிகள் மற்றும் அவதானிக்கப்பட்ட விடயங்கள் யாவும் கணிப்பீட்டு முறைக்குள் உள்வாங்கப்பட்டன. நோய் நிர்ணயம் செய்வதற்காக ஐஊனு 10இ னுயளள21இ னுளுஆ ஏ பயன்படுத்தப்பட்டது. சேவைநாடியின் பிரச்சினையை அளவிட்டுக் கொள்ளுவதற்கு ளுறுழுவு இ ளுpனைநச னுயைபசயஅ என்பன பயன்படுத்தப்பட்டது முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத் தரவுகளை கொண்டும் கள மேற்பார்வையாளரும் நோய் நிர்ணயப்படுத்தலின் மூலமும் சேவைநாடி பீதி நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது கணிப்பிட முடிந்தது. சேவைநாடியிடம் காணப்படும் உளப்பிரச்சினையை அடையாளம் காண்பதற்காக உளவியல் அளவீடுகளான ளுறுழுவு யுயெடலளளை முறைமை ளுpனைநச பசயஅ போன்றன பயன்படுத்தப்பட்டன.
3.3 தகவல் பகுப்பாய்வு முறைமை
இங்கு சேவைநாடியிடம் இருந்து நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் அவரிடம் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனையோருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மூலமாக தகவல் பகுப்பாய்வு முறை இடம் பெற்றது. இதற்கான விபரண ஆய்வு பயன்படுத்தப்பட்டது. விபரண ஆய்வு என்பது எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சினை அல்லது விடயம் பற்றிய பூரணமாக தகவல்களைப் பெற்று அதனை விபரிப்பதாகவும் விளக்கமளிப்பதாயும் அமையும். கடினமான மன அழுத்த அறிகுறிகளில் பின்வரும் அறிகுறிகள் சேவைநாடியிடம் அவதானிக்கப்பட்டது.
உளங்குணங்குறிகள்
தீவிர பதற்றம்
தீவிர பயம்
கவலை
தனிமையாக இருக்க விரும்புதல்
யாரேனும் அவர்களை தொடுவதைத் தவிர்த்தல்
இறுக்கம்
ஆறுதலின்மை
திடுக்கிடுதல்
கூச்ச உணர்வு
தன்னை விட்டு விலகி இருப்பது
கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் அல்லது "பைத்தியம் பிடித்துவிடும்" என்ற பயம்.
இறக்கும் பயம்.
உடல் சார்ந்த அறிகுறிகள்
வேகமான இதயத்துடிப்பு
நெஞ்சுவலி
சுவாசிப்பதில் சிரமம்
அதிகமாக வியர்த்தல்
தலை சுற்றல்
வயிற்றுவலி
நடுக்கம்
மூச்சுத் திணறல் போன்ற உணர்வுகள்.
மார்பு வலி அல்லது அசௌகரியம்.
குமட்டல்
No comments:
Post a Comment