சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவிய சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கம் : பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில், தேடப்பட்டு வரும் சப் இன்ஸ்பெக்டர் சிறிகஜன் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள சிறிகஜன் கூடிய விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.
No comments