4000 பேருக்கு விரைவில் கிராம உத்தியோகத்தர் நேர்முகப் பரீட்சை : ஜயந்த சமரவீர
கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நான்காயிரம் பேருக்கு விரைவில் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தொவித்தார்.
நாடெங்கிலும் ஆயிரத்து 815 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறை பின்போடப்படவில்லை என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கூறினார்
பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் அபேவர்த்தன இவ்வாறு பதில் அளித்தார்.

No comments