ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் :மாத்தளை
மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தம்புள்ளை, மாத்தளை வீதியின் பன்னம்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேன் மற்றும் பஸ் ஒன்று மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுக்கு 5 சிறுமிகள் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
கண்டியில் இருந்து பொலனறுவை வரை பயணித்த பஸ் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை வேனில் சென்றவர்கள் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments