Friday, May 23, 2025

இலங்கை உளவளத்துணை வரலாறு

இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஆயுர்வேத வைத்திய முறை மற்றது சாந்தி செய்தல் முறை இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் அசாதாரண நடத்தைகளை குணப்படுத்துவதற்காக ஆரம்ப காலங்களில் இரண்டு வகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

1. ஆயுர்வேத வைத்திய முறை 

2. சாந்தி செய்தல் முறை 

இவை பரம்பரையோடும் சமயத் தோடும் தொடர்புடையதாக அமைந்தது. 



மேலும் 1846 இல் பொரல்லையிலுள்ள கெம்பல் பூங்காவிற்கு அருகில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கான வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1845இல் ஆளுநராக சேர் கொலின் கெம்பல் என்பரே இதற்கான ஆலோசனையை முன்வைத்தார். 1851இல் பொரல்லை மருத்துவமனையின் தலைவராக வைத்தியர் பெம்பீக் தெரிவு செய்யப்பட்டார். அவர் பரீட்சார்த்தமாக தொழில் பயிற்சி சிகிச்சை முறையை ஆரம்பித்து வைத்ததோடு பயன்மிக்க ஆலோசனைகளையும் முன்வைத்தார். பொரல்ல மருத்துவமனையில் ஏற்பட்ட இடநெருக்கடியினால் 1876-1885 இடைப்பட்ட காலத்தில் கொழும்பு குறுந்துவத்தையில் இன்னுமொரு மனநோய் மருத்துவமனை கட்டப்பட்டது. பின்னர் உருவாக்கப்பட்டது. 1964 1971 இல் இல் அங்கொடையில் கொழும்பு பிரதான மற்றுமொரு மருத்துவமனை வைத்திசாலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உளமருத்துவப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டது. (அஸ்கர்:2010:12) 1960 காலப்பகுதியில் ஜோன் மேயர் என்னும் ஆசிரியரினால் கல்வி அமைச்சினூடாக உளவியல் கற்பிக்கப்பட்டது. ஆனால் இதில் ஆசிரியர்கள் கவனிக்கப்படவில்லை. பின்னர் பல்கலைக்கழகங்களில் மாணவர், ஆசிரியர்களின் தேவை கருதி 1981 காலப்பகுதியில் உளவளத்துணைப் பாடப் போதனை ஆரம்பிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு உளவளத்துணை சேவைக்காக பல நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்நிறுவனங்களினூடாக உளவளத்துணை இலங்கையில் பல பாகங்களுக்கும் பரவலாகச் சென்றடைந்தது. 1986ஆம் ஆண்டு அப்போதிருந்த அரசாங்கம் இத்துறையின் பக்கம் விசேட கவனம் செலுத்தியமை வரலாற்றில் முக்கியமானதாகும். 1988 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இத்துறை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. பேராசிரியர் ரணவக்க உளவியல் நிறுவனம்  ஒன்றை ஆரம்பித்தமை முக்கிய அம்சமாகும். மேலும் 2008 ஜனவரி மாதத்திலிருந்து தொலைபேசியூடாக உளவளத்துணை சேவையை வழங்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.


உளவளத்துணைக்கான நிர்வாக கட்டமைப்பு

உளவளத்துணை கிளையானது மேலதிக அரசாங்க அதிபரின் நேரடிக் கட்டுப்பாடில் அரசாங்க அதிபரின் தலைமையின் கீழ் மாவட்டத்திற்கான பல்வேறுபட்ட உளவளத்துணை சேவைகளை வழங்கிவருகின்றது.

உளவியல் முறைகளின் ஊடாக நபர்களின் விருத்தி சமநிலையற்ற உளநிலைகளைத் தவிர்த்தல், நிறுவன ஒருங்கிணைப்பு தலைமைத்துவம் வழங்குதல் அறிவூட்டல் மற்றும் உளவளத்துணை தேவைகளை நிறைவுசெய்தல் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்தி சகல பிரஜைகளையும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் பங்குபெறவைத்தல். 

உளவளத்துணைக்கான நிர்வாக கட்டமைப்பு மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் உதவி மாவட்ட செயலாளர் மாவட்ட உளவளத்துணை அலுவலர் 

 மாவட்ட செயலகத்தின் உளவளத்துணை அமர்வுகளுக்காக உளவளத்துணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உளவளத்துணை செயலமர்வுடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களான கிராமசேவகர்கள் பெண்கள் மற்றும் சிறுவர் உளவளத்துணை உத்தியோகஸ்த்தர்கள் , பிரதேச செயலக உளவளத்துணை ஆலோசகர்கள் , சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் , சமூகசேவை உத்தியோகஸ்த்தர்கள் பலரும் சேவைநாடிகளை அனுப்பிவைக்கும் தன்மை காணப்படுகின்றது.

No comments:

Post a Comment