Friday, May 23, 2025

பதகளிப்பு பிரச்சினையை விளங்கிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட இலக்கியமீளாய்வு




பதகளிப்பு பெரும்பாலும் நெருக்கீடுகளைத் தொடர்ந்து ஏற்படு கிறது. அதுவும் அனர்த்தகாலங்களைத் தொடர்ந்து பெரும்பாலானவர் களில் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் உணர்ச்சி வெளிப்பாடாக அல்லது மெய்ப்பாட்டு அறிகுறியாக வெளிப்படுகின்றன. இறுகிய தசைகள், மிகையான களைப்பு, நித்திரையின்மை மற்றும் மூச்சுவிட முடியாமை, அதிக இதயதுடிப்பு, விண்விண் என வலிக்கும் தலையிடி கைகளில் மற்றும் உடலில் ஒருவித குளிர்வியர்வை என்பன இவற்றின் அறிகுறிகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த அறிகுறிகள் எமக்கு சாதாரணமாக நெருக்கீடு மிகுந்த வேளைகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாகவும் தொடர்ந்தும் காணப்பட்டு அவை எம் வாழ்வினைப் பாதிக்கத்தொடங்கும் போது பதகளிப்பு நோயாக எம்மை ஆக்கிரமிக்கின்றன. வாய்வறண்டு உலர்ந்துபோதல், தேவையற்று சினம் கொள்ளுதல் தேவையற்ற அச்சம் பதட்டம் ஏதோ ஒன்று நடக்கப்போவதான பிரமை ஒரு விழிம்பு நிலையில் இருப்பதான உணர்வு என்பனவும் பதகளிப்பு நோயின் அறிகுறிகள். இத்தகைய நோய் எமது சமூகத்தில் அதிகம் காணப்பட்ட போதிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காது விடுவதன் மூலம் பலர் இவற்றைத் தம் வாழ்வின் ஒரு பாகமாக அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். - “நலமுடன்” எஸ். சிவதாஸ்

போர் அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்றிருந்த போது பல வைத்தியசாலைகள் மீள்புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பலரும் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்து மீண்டு வந்து தமது பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கி இருந்தனர். அவர்களுக்கு 'மகிழ்வுடன் வாழ்தல்ழூ பயிலரங்குக மேற்கொண்டிருந்தேன். அந்தப் பயிலரங்குகளில் நான் கேட்கும் முக்கியமான கேள்வி உங்கள் பிரதேசங்களில் 'மனநோய்' எவ்வளவு வீதம் காணப்படுகிறது பெரும்பாலானவரின் பதில்கள் 50மூ..70மூ....80மூ....90மூ என அமைந்திருந்தது. சிலர் 100மூ எனக் குறிப்பிட்டிருந்தனர். 50மூ குறைவான மக்கள் என்ற பதிலை அரிதாகவே காணமுடிந்தது. நான் அவர்களிடம் இத்தனை வீதம் மனநோய் இருந்தால் என்பாடு கொண்டாட்டம் தான் எனப் புன்முறுவல் உடன் குறிப்பிட்டேன் பெரும்பாலான பயிலரங்குகளில் இத்தகைய பதில்கள் தெரிவிக்கப்பட்டன. அடுத்ததாக உங்கள் முன்வீடு, அயல்வீடுகள், பின்வீடு என எல்லா வீடுகளிலும் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா என்ற கேள்வி அவர்களைச் சிந்திக்கச் செய்தது. இவர்கள் எல்லோரும் ஏன் இப்படி பதிலளிக்கின்றனர் என்று வினவியபோது பலரும் எல்லோரும் ஏதோ விதத்தில் மனப்பாதிப்புக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்றனர். மனப்பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கிற தன்மை மனநோய் ஆகிவிடுமா? பல மனநல மருத்துவர்களின் மனநோய் அதிகரித்திருக்கிறது என்ற கருத்துக்களும் மனநோய் மருத்துவமுகாம் எனச் செய்யப்படுகிற நிகழ்வுகளும் இந்த நிலையில் மக்களைத் தள்ளிவிடுகின்றது. 5-10மூ அதிகமாக மனநோய் இருப்பதற்கான சான்றுகள் சாதாரண சமூகத்தில் இருந்திடமுடியாது. அதிலும் தீவிர மனநோய் என்பது மிகக்குறைவானது. தொடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இவை 10-15மூ மாக இருப்பதற்கு ஏதுநிலையுண்டு. “மகிழ்வுடன்” எஸ். சிவதாஸ்

பதகளிப்பு என்பது பயம் அல்லது நெருக்கீடு காரணமாக வெளிக்கொணரப்படும் சாதாரண, உணர்வுபூர்வமான உடலியல் இடர்ப்பாடாகும். இது இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள் வதற்கான உடலியல் இசைவாக்கம் ஆகும். இதன் மூலம் உடல், உளரீதியில் அப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடிகின்றது. அதாவது, ஆபத்தானது என்று கணிப்பிடப்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அல்லது அதனின்றும் விலகிவிடுவதற்கான உடல், உள உசார்ப்படுத்தலாகும்  (கiபாவ ழச கடiபாவ). இவ்வாறான இயற்கையான பயப்பாடு அல்லது கவலை அளவுமீறி அல்லது தொடர்ந்து காரணமின்றித் தோன்றும்போது அது (நோயியல் தன்மை பெறுகிறது). அதனைப் பதகளிப்புக் கோளாறு என்று அழைக்கலாம். கவலை, பயம் போன்றவற்றினால் ஏற்படுத்தப்படும் பதகளிப்பு நோயுடன் மிதமான மனச் சோர்வும் சேர்ந்து அமையலாம். - தமிழர் சமுதாயத்தில் உளநலம் தயா சோமசுந்தரம் , சா சிவயோகன்

No comments:

Post a Comment